புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2018)

பரலோகம் செல்லும் வழி

மத்தேயு 22:39

உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.


கிழக்கில் இருக்கும் புதிய ஊருக்கு பிரயாணப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், வழியிலே, மேற்கு பக்கமாக பிரயாணப்பட்டுக் கொண்டிருந்த தன் அயலவன் ஒருவனுக்கு எதிர்ப்பட்டான். அந்த மனிதன் தன் அயலவனை நோக்கி: நீ எங்கே போகின்றாய் என கேட்டான். அந்த அயலவன், மேற்கு திசையை நோக்கி பிரயாணப்பட்டுக் கொண்டிருந்த போதிலும்,  “நானும் அந்த புதிய ஊருக்கு போகும்படிக்கே பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்”  என கூறினான். அந்த மனிதன் தன் அயலவனை நோக்கி: புதிய ஊர் கிழக்கிலே உண்டு. நீயோ மேற்கை நோக்கி பிரயாணப்படுகின்றாய். நீ என்னுடன் வந்தால், நான் உனக்கு வழியை காண்பிப்பேன் எனக் கூறினான். இன்று பலவிதமான வேறுபட்ட மத நம்பிக்கையோடு, வாழ்ந்து வரும் மனிதர்கள், தாங்கள் மோட்சம் செல்ல ஆயத்தப்படுகின்றோம் என கூறுகின்றார்கள்.  ஆனால், “நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கின்றேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரமு டியாது. என்று இயேசு கூறியிருக்கின்றார். இதை நன்கு அறிந்த நீங்கள், அதை உங்கள் அயலவருக்கு, நண்பர்களுக்கு, உறவினருக்கு அறிவித்தால், அவர்கள் மனதை புண்படுத்துவோம், அவர்களின் நம்பிக்கையை நாங்கள் கனப்படுத்த வேண்டும் என்று கூறி மௌன மாக இருக்க முடியுமா? கிழக்கில் இருக்கும் ஊருக்கு போவதற்காக நீங்கள் மேற்கை நோக்கி பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கையில், அதை அறிந்த அயலவன் ஒருவன், இவன் எங்கு போனாலும் எனக் கென்ன என்று நினைத்து, நீ போகும் வழியை நான் கனப்படுத்து கின்றேன் என்று கூறி மௌனமாக இருப்பது சரியாகுமா? பிரியமா னவர்களே, இன்று அநேகர், மற்றவனை மதிக்க வேண்டும் என்று எண்ணி, மீட்பு இயேசு கிறிஸ்து வழியாக மட்டுமே உண்டு என்னும் சத்தியத்தை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கின்றார்கள். ஒரு வேளை மற்றவர்கள ஏற்றுக் கொள்ளாவிடினும், நீங்கள் அறிந்த மீட்பின் வழியை, அதை அறியாத யாவருக்கும் நீங்கள் அறிவிக்க வேண்டும். உங்கள் ஆத்துமா நித்திய ஜீவனை அடைவது போல உங்கள் அயலவரின் ஆத்துமாவும் நித்திய ஜீவனை அடையும்படி யாய் நற்செய்தியை அவர்களுக்கும் அறிவியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே,  பரலோகம் சென்றடையும் வழியை நீங்கள் எனக்கு வெளிப்படுத்தியதற்காய் நன்றி. அந்த வழியை அறியாதவர்களுக்கு அதை எடுத்துக் கூறும்படியான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 16:15