புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2018)

சமரசமற்ற வாழ்க்கை

உபாகமம் 6:5

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.


அரசாங்க ஊழியர் ஒருவருக்கு, பதவி உயர்வு கிடைத்து,  தேசத்தின் ஆளுனர் ஒருவரின் மாளிகையிலே வேலைக்கு அமர்த்தப்பட்டார். கர்த்தரை அறியாத அந்த ஆளுனரின் மாளிகையிலே முக்கிய உறுப்பினராக இருக்கும் நான், இனி அவரை கனவீன ப்படுத்தும் விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே என் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று, தன் விசுவாச வாழ் க்கையிலே சமரசம் செய்ய ஆரம்பி த்தார். தன்னுடைய நிலையை நியாய ப்படுத்தும்படியான விளக்கங்களையும் கூறினார். இந்த உலகிலே எங்களை ஆளும் அதிகாரிகளுக்குரிய கனத்தை நாங்கள் கொடுக்க வேண்டும். தேவ னுக்குரிய கனத்தை தேவனுக்கும், அதிகாரிகளுக்குரிய கனத்தை அதிகா ரிகளுக்கும் கொடுக்க வேண்டும். ஆனால், தேவனுக்குரிய கனத்தை, உலக அதிகாரிகள் எடுக்க முயலு ம்போதும் அல்லது நாங்கள் தேவனுக்கு கொடுக்கவேண்டிய கனத்தை கொடுக்காமல் தடைசெய்யும் போதும் நாங்கள் எந்த சமரசத்திற்கும் இடங்கொடாமல், தேவனுக்குரிய கனத்தை தேவனுக்கு செலுத்த வேண்டும். தானியேல், சாத்ராக், மே~hக், ஆபேத்நேகோ என்ப வர்கள் சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு ராஜ மாளிகையிலே சேவை செய்தார்கள். ராஜாவுக்குரிய கனத்தை செலுத்தினார்கள் ஆனால் உயிர்போனாலும் தேவனுக்குரிய கனத்தை தேவனுக்கே செலுத்துவோம் என்று ராஜாவுடனும் எதிர்த்து நின்றார்கள். யோசேப்பு என்னும் வாலிபன் தன் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து செய்வதை செம் மையாக செய்தான். ஆனால் தேவனுக்கு விரோதமான செய்கைக்கு சற்றும் உடன்படாமல் பாடுகளை சகித்தான். பிரியமானவர்களே, விசுவாசத்திற்கு எதிரான விவகாரங்களில் ஈடும்படும்படி உங்களை உங்கள் அதிகாரிகள் கூறும்போது, சகல கனத்துடன், பண்பான வார்த்தைகளால், அதை ஏன் நீங்கள் செய்யப் போவதில்லை என்பதை விபரித்துக் கூறுங்கள். தேவன் என் நிலையை அறிவார் என்று துணிகரமான செயல்களுக்கு உடன்படாதிருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, பொருளாசை, பதவி மோகங்கள், உலக செல்வாக்குகளில் கண்களை பதித்து, உம்மை அசட்டை செய்யாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 24:15