புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2018)

பிறருக்கானவைகள்

பிலிப்பியர் 2:4

அவனவன் தனக்கான வைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.


வேகத்தை தணிக்கவும் என்று போடப்பட்ட சாலை விதியை மீறி, நெடுஞ்சாலையிலே வாகனத்தை ஓட்டிச்சென்ற வாலிபன், பெரும் விபத்துக்குள்ளானான். அவனுடைய துணிகரமான செய்கையினால், அவன்; மட்டுமல்ல, பலர் கடும் காயமுற்றார்கள். இதனால், சில குடும்பங்களின் வாழ்க்கைமுறை, பொருளாதாரம், எதிர்காலம் ஈடுசெய்ய முடியாதபடி நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இதைப் போலவே எங்கள் நடவடிக்கைகள் எங்களை சூழ வசிப்பவர்களையும், நாங்கள் அறியாத வர்களையும் பல மட்டங்களிலே பாதி க்கின்றது. ஆதலால், அவை யாவற்றி ற்கும் நாங்கள் கணக்கொப்புவிக்க வேண்டும். எங்களுடைய பேச்சும், செய்கையும் எங்களுக்கும், மற்றவர்க ளுக்கும் நன்மை பகர்கின்றதாக இருக்க வேண்டும். எங்கள் செயற்பாடுகனை மற்றவர்கள் காணும் போது, பரலோகத்திலிருக்கின்ற பரம பிதாவின் நாமத்தை அவர்கள் மகிமைப் படுத்த வேண்டும். துணிகரமான செயல்கள் மட்டுமல்ல, சில வேளைகளிலே எங்களுக்கு நன்மையாக தோன்றும் செயற்பாடுகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதுமுண்டு. எனக்கும் என் குடும்பத்திற்கும் இலாபம் உண்டானால் போதுமென்று, மற்றவர்களை குறித்த எண்ணம் இல்லாமல் வியாபாரம் செய்பவர்களும், பொருட்களை கொள்வனவு செய்பவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை தங்கள் வியாபாரத்தி றன் என்று பெருமை பாராட்டிக் கொள்பவர்களும் உண்டு. வீட்டிலே நாங்கள் செய்யும் வேண்டப்படாத கிரியைகள் வீட்டிலுள்ளவர்களை  பாதிக்கின்றது போல, வேலை இடங்களிலும், சபை ஜக்கியங்களிலும் எங்கள் செயற்பாடுகள், பலரைப் பாதிப்படைய வைக்கின்றது என் பதை நாங்கள் நன்கு உணர்ந்தவர்களாக செயற்படவேண்டும். இஸ்ர வேலர் எரிக்கோவை முற்றுகையிட்டபோது, இந்தப் பட்டணமும் இதி லுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்;. எனவே பாளயத் தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள் என்று கர்த்தர் கூறினார். ஆனால், ஆகான் என்னும் மனிதன், பொருட்களை இச்சித்ததினால், பெரும்பாதகம் இஸ்ரவேலு க்குள் வந்தது. எனவே எங்களினால் மற்றவர்களுக்கு பங்கம் வராத படிக்கு எல்லா விடயங்களிலும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எங்களை சூழ இருப்பவர்களின் நிலையை உணராமல், பல விடயங்களை நாங்கள் செய்து விடுகின்றோம். பிறர்நலம் கருதி தீர்மானங்களை எடுக்க உணர்வுள்ள இருதயத் தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:2