புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2018)

எல்லாம் அறிந்த தேவன்

புலம்பல் 3:37

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?


இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்ட ணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண் டீர்கள். இதோ, அவர்களும் நீங்களும், உங்கள் பிதாக்களும் அறி யாத தேவர்களுக்குத் தூபங்காட்டவும், ஆராதனை செய்யவும் போய் எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கி றது, அவைகளில் குடியில்லை. நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரி யத்தைச் செய்யாதிருங்களென்று, தீர் க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை க்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள். இதனால் தன்னுடைய ஜனங்கள் அறிவடையும்படி பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் தன் ஜனங்களையும் அவர்களுடைய தேசத்தையும் ஒப்புக் கொடுத்தார். எனவே இன்றைய நாட்களிலும் தேவனுடைய ஆளுகையை அறிந்து கொள்ளுங்கள். தேவனுக்கு மிஞ்சின எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவ நாடுகள் என்ற பெயரை சூடிக்கொண்டு, தேவனுடைய சித்தத்திற்கு எதிராக தங்கள் சிந்தையை மாற்றிக்கொண்டு, உணர்வற்றவர்களாக, பரிசுத்த குலைச்சலை செய்யும் ஜனங்கள் தங்கள் மனவிருப்பத்திற் கேற்ற தலைவர்களை வாஞ்சிப்பதால், தங்கள் மேல் அழிவுகளை வரவழைக்கின்றார்கள். சர்வவல்லமையுள்ளவர், மனிதர்கள் மேல் தம் முடைய கிருபையை நாள்தோறும் பொழிகின்றார். எனவே தேவனு டைய ஆளுகையை குறித்து நீங்கள் விமர்சனம் செய்யாமல், சர்வவல்லவருடைய ஆளுகையை அறிந்து, அதற்கு கட்டுபட்டிருக்கும் ஞானத்தை அவரிடம் கேளுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, பூமியும் அதன் நிறைவும், அதன் குடிகளும் உம்முடையது. நீரே எல்லா அதிகாரத்திற்கும் மேற்பட்டவர். உம்முடைய ஆளுகையை அறிந்து கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 45:12-13