புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2018)

வழிகளை ஆராய்ந்து அறியுங்கள்

2 கொரிந்தியர் 13:5

நீங்கள் விசுவாசமுள்ள வர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங் களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்


தம்முடைய ஜனங்களை, தம்மண்டையிலே நடத்தும்படிக்கு, வேதபிர மாணங்களை கற்றுக் கொடுக்கும்படிக்கும், தேவனை ஆராதனை செய்தல், பலி கொடுத்தல் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்லும் படிக்கும் தேவன்தாமே ஆசாரியர்களையும் மூப்பர்களையும் ஏற்படுத்தி னார். காலப்போக்கில் இவர்கள் மதத் தலைவர்கள் ஆனார்கள். ஆரம்பத்திலே இவர்கள் தேவனாலே தெரிந்தெடுக்கப்பட்டார்கள். இந்த ஆசா ரியர்களும், மூப்பர்களும், இஸ்ரவேல் ஜனங்கள் யாவரும், வாக்களிக்கப்ப ட்ட மெசியா வருவார் என்று காத்திரு ந்தார்கள். வாக்களிக்கப்பட்ட மெசியா வாகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்ட போது, இந்த மதத் தலைவர்களின் சங்கம் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இயேசுவும் அவர்களை பார்த்து ‘குருடருக்கு வழிகாட்டும் குருடர்’ என்று கூறினார். அந்த மதத் தலைவர்களை தள்ளி, தம்மு டைய ஊழியத்திற்கென்று எளிமையானவர்களை தெரிந்தெடுத்தார். இன்று அந்த ஊழியங்கள் வளர்ந்து பெரிய ஸ்தாபனங்களாக மாறி யுள்ளது. நாங்கள் முதல் வந்தோம், கர்த்தர் எங்களைத் தெரிந்தார், எங்கள் ஸ்தாபனம் பெரிது என்று சொல்லுவதால் கர்த்தர் எங்களோடு இருக்கின்றார் என்பது பொருள் அல்ல. இப்படியாகத்தான் இஸ்ரவே லில் மதத்தலைவர்கள் கூறி, இயேசுவை ஏற்க மறுத்தார்கள். எனவே, உங்கள் வழிகளை ஆராய்ந்து பாருங்கள். இன்று மதத்தலைவர்கள் உங்கள் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இன்று இயேசு மத்தியவானத்தில் வந்தால், உங்களை ஏற்றுக் கொள்வாரா? நீங்கள் பிதாவின் சித்தத்தை செய்த, உண்மையும் உத்தமமும் உள்ளவர்கள் என்று கூறுவாரா? எனவே நீங்கள் இயேசுவோடு நடக்கின்றீர்களா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து அறியுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய வழிகளையும் இருதயத்தின் நினைவுகளையும் அறிந்திருக்கின்றீர். உமக்கு பிரியமில்லாத வழிகளை விட்டு. பரலோகம் வந்து சேரும் வழிகளிலே நடக்க எனக்கு கற்றுத்தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 121:7