தியானம் (ஆனி 20, 2018)
ஆதரவாயிருங்கள்!
கொலோசெயர் 4:17
நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
அயலிலுள்ளவர்களுக்கு உதார குணத்துடன், தாராளமாய் உதவி செய்யும் மனிதன், தான் வாழும் கிராமத்திலே நன்மதிப்பைப் பெற்றிருந்தான். பல ஆண்டுகள் சென்றபின், அந்த அயலில் புதிதாக குடியே றிய ஒரு குடும்பம், அந்த சமுதாயத்திற்கு உதவும் பொருட்டு சன சமூக நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். உதாரகுணமுள்ள மனித னுக்கு விசுவாசமுள்ள சில அயலவர் கள், அவனிடம் சென்று, நீ இவ்வளவு காலமாய் பலருக்கு பல சேவைகளை செய்து வந்தாய், ஆனால் இப்போது குடியேறிய குடி, உன்னை மீறி, சனசமுக நிலையத்தை ஆரம்பித்திருக்கின் றார்கள், நீயும் அதற்கு ஈடாக ஒரு நிலையத்தை ஆரம்பிக்க விரும்பி னால், உனக்கு பூரண ஆதரவு தரு வோம் என்றார்கள். ஆனால் அந்த உதார குணமுள்ள மனிதன் அவர் களை நோக்கி: சகோதரர்களே, என்னுடைய பெலத்தின்படி சிறிய அளவிலே அயலவர்களுக்கு உதவுவதே என்னுடைய அழைப்பும் நோக்கமும்.இப்படி ஒரு சனசமுக நிலையம் இந்த கிராமத்தில் அமை க்கப்பட வேண்டும் என எதிர்பார்த்திருந்தேன், அந்த ஆசை நிறை வேறியிருகின்றது. சனசமுக நிலைய முகாமைத்துவம் என் பெலத் திற்கும் அறிவிற்கும் மேற்பட்டது. என்னுடைய பெயர் பிரசித்தப்படுத்து ம்படி அல்ல, இந்த கிராம மக்கள் நலன்பெறும்படியே விரும்புகின் றேன். என்னால் முடிந்த உதவியை அந்த சனசமுக நிலையத்திற்கு செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன் என்றான். பிரியமானவர்களே, அந்த உதாரகுணமுள்ள மனிதன் கூறியது போலவே, கர்த்தருக்குள் எங்கள் அழைப்பை நிறைவேற்றும்படிக்கே நாங்கள் அழைக்கப்பட் டோம். உடன் சகோதரருக்கிடையில், சபை ஐக்கியங்களுக்கிடையில் போட்டிப்பந்தயத்திற்காக நாங்கள் அழைக்கப்படவில்லை. தேவனால் வரும் எந்த நன்மைக்கும் ஆதரவாயிருங்கள்.
ஜெபம்:
இரக்கமுள்ள தேவனே, எந்த நன்மையையும் வாதினாலும் வீண் பெருமையினாலும், போட்டிமனப்பான்மையோடும் செய்யாமல் உம்மு டைய சித்தத்தை நிறைவேற்றும்படி செய்ய கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:15-17