புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2018)

அதி உன்னதமான அழைப்பு

2 பேதுரு 1:10

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இட றிவிழுவதில்லை.


தேசத்தை ஆட்சி செய்யும் பராக்கிரமமுள்ள ராஜா, ஒரு சாதாரண குடிமகனின் குடும்பத்தை விருந்திற்காக அழைத்திருந்தான். அரண்மனைக்கு அருகில் போவதற்கே அருகதை அற்றவர்களாக இருந்தவர்கள், இப்போது, அரண்மனைக்குள்ளே, ராஜாவோடும் மந்தி ரிகளோடும், தளபதிகளோடும் விருந்துண்ணப்போகின்றார்கள் என் பதை நினைத்து அவன் குடும்பம் பெரு மகிழ்ச்சி அடைந்தது. நாட்கள் அண்மித்துக் கொண்டு வர வர அவர் கள் பரவசம் பெருகிக் கொண்டே வந்தது. பிரியமானவர்களே, சற்று சிந்தி யுங்கள்! நாங்கள் சர்வத்தையும் சிருஷ் டித்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரால், நித்திய ஜீவனை பெற்று, நிடூழியாக பரலோக ராஜ் யத்திலே வாழும்படியாய் அழைக்கப்ப ட்டோம். அன்றன்றைய நாட்களின் பாடுகள் சில வேளைகளிலே வாழ்க் கையைக் குறித்த சலிப்பை உண்டு பண்ணிவிடுகின்றது. எனவே உங் கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் குறித்து அசதியாக இருந்து விடாதீர்கள். இந்த உலகத்திலே உயிர் வாழும்வரை நாங்கள் செய்ய வேண்டிய பொறுப்புக்களின் அழைப்பு உண்டு. சிலர் பிரத்தி யேக ஊழியர்களாக தேவ சேவைக்காக பிரித்தெடுக்கப்படுகின்றார் கள். சிலர் ஊழியத்திற்கு உதவியாகவும், வேறு சிலர் ஊழியர்களை உருவாக்கும் நல்ல தாய், தந்தையராகவும் அழைக்கப்பட்டிருக்கி ன்றார்கள். இவை யாவற்றையும் விட பிதாவாகிய தேவன் தாமே எங் களை தம்முடைய ராஜ்யத்தின் பங்காளிகளாக அழைத்திருக்கின்றார். இதை உறுதியாய் உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். இந்த மேன்மையை உணர்ந்து கொள்ளும்படியாக பிரகாசமுள்ள மனக்க ண்களை தரும்படியாக தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். 

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, பரலோக ராஜ்யத்திலே நித்தியமாய் உம்முடன் வாழும்படியான அதி உன்னதமான அழைப்பைப் பெற்ற நான், அதின் மேன்மையை உணர்ந்து கொள்ளும்படியான உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:1