புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2018)

உபயோகமுள்ள பாத்திரங்கள்

2 தீமோத்தேயு 2:21

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன் னைச் சுத்திகரித்துக்கொ ண்டால், அவன் பரிசுத்த மாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக் கும் ஆயத்தமாக்கப்பட்ட துமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.


புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிப்பதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று பவுல் என்னும் மனிதனைக் குறித்து கர்த்தராகிய இயேசுதாமே சாட்சி கொடுத்தார். இப்படியாக தங்களை  அழைத்த  எஜமானனாகிய இயேசுவுக்கு உபயோகமான பாத்திரங்களாக தங் களை அர்ப்பணித்தவர்கள், கனத்துக்கு ரிய பாத்திரமானார்கள். அதாவது, இயேசு எங்களை உபயோகிக்கும்படியாய் எங்களை முற்றுமுழுக்க ஒப்படைக்க வேண்டும். ஆனால் இன்று சில மனிதர்கள், இயேசுவை உபயோகிக்கும் பாத்திரங்களாக மாறிவிடுகின் றார்கள். அது எப்படியெனில், இந்தப் பூமியிலே தங்கள் சுய இலாபத்திற் காக, கர்த்தராகிய இயேசுவின் நாம த்தை, தங்கள் சித்தப்படி துணிகரமாக உபயோகிக்கின்றார்கள். கிறிஸ்து இயே சுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக, இலக்கை நோக்கித் தொடருவதற்கு பதிலாக, தங்கள் சுய இலக்கை நாடி ஓடுகின்றார்கள். அவர்கள், கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர், அவ ர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்க ளுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்த வைகளைச் சிந்திக்கிறார்கள் என்று தேவனுடைய மனிதனாகிய பவுல் கூறினார். பிரியமானவர்களே, நாங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந் தாலும், எங்களை முற்றும் முழுவதுமாக கர்த்தராகிய இயேசுவிடம் அர்ப்பணிக்கும் போது, கனமான உபயோகமுள்ள பாத்திரமாக மாற்றுவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, சத்தியத்தைவிட்டு விலகும் வீண் பேச்சுக்களுக்கு இடங்கொடுக்காதபடிக்கு, உம்முடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, உமக்கு உகந்த பாத்திரமாக விளங்கும்படிக்கு என்னை வழிநடத்தும்.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 64:8

Category Tags: