புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2018)

உத்தமமாய் பின்பற்றுங்கள்

எண்ணாகமம் 14:24

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்.


மோசே, கானான் தேசத்தை சுற்றிப்பார்க்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரில், 12 பேரை தெரிந்தனுப்பினார். அவர்களில் ஒருவன் காலேப். அப்பொழுது அவனுக்கு 40 வயதாக இருந்தது. தேசத்தை சுற்றிப்பார்த்து வந்தவர்களில் 10 பேர் கானானிலுள்ள பலவான்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் கர்த்தருக்கு விரோதமாக கலகம் பண்ணும்படி, ஜனங்களை தூண்டிவிட் டார்கள். இதனால் பேரழிவு உண்டா னது. யுத்தத்திற்கு புறப்படக்கூடிய மனிதர்களில் காலேப்பையும், யோசுவா வையும் தவிர வேறு ஒருவரும் கானான் போவதில்லை என்று கர்த்தர் கூறி னார். கானான் தேசத்திலே, ஏனாக்கின் குமாரராகிய இராட்சத பிறவிகள் இருந்ததை காலேப் கண்டிருந்தும், சற்றும்   தயங்காமல், மோசேயை நோக்கி: நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ள லாம் என்றான். முகஸ்துதிக்காக இவன் இப்படி சொல்லவில்லை, ‘என் இரு தயத்திலுள்ளபடியே மறுசெய்தி கொண் டு வந்தேன்’ என்று காலேப் கூறினான். ஏனெனில் காலேப் தேவனை உத்தமமாக பின்பற்றி வந்தான். 45 வருடங்களுக்கு பின், அவனுக்கு 85 வயதானபோது, கர்த்தர் சொன்ன பிரகாரம் காலேப் கானான் தேசத்திலிருந்தான். அந்த வயதிலும் தன் பெலன் குறையவில்லை என்று கூறி, ஏனாக்கியராகிய இராட்சதர்கள் இருக்கும் இடத்தை தனக்கு தரும்படி கேட்டு, அவர்களுக்கு பயப்படாமல், அவர்களை மேற்கொண்டான். சூழ்நிலைகளை கண்டு கலங்கி, மற்றவர்களையும் கலக்கமடையச் செய்யக்கூடாது. நாங்கள் தேவனை உத்தமமாய் பின்வற்றி வந்தால்,  இந்த பூமியிலே நடைபெ றுகின்ற எப்படிப்பட்ட பயங்கரமான தீய செயல்களும், நாங்கள் சென்றடைய வேண்டிய பரலோகத்திற்கு தடையாக இருக்க முடியாது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எதிராளியான பிசாசு கெர்ச்சிக் கிற சிங்கம் போல வந்தாலும், அவனை கண்டு பயப்படாமல், உம் வழியில் நடக்க, உம்முடைய தூய ஆவியானவரின் வழிநடத்துதலைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 14:6-15