புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2018)

‘இயேசு’ என்னும் ஒரே நாமம்

எபேசியர் 1:20

எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர் ந்திருக்கத்தக்கதாக..


இன்றைய நாளிலே நீங்கள் நித்திரையைவிட்டு விழித்தெழுந்ததிலிரு ந்து இந்தத் தியானத்தை வாசிக்கும்வரை “இயேசு” என்ற நாமத்தை அறிக்கையிட்டீர்களா?  “இயேசு” என்ற நாமத்தின் வல்லமையை அறிவ தில் தினமும் வளரவேண்டும். அந்த அறிவிலே வளர்ந்து, விசுவாசத் தோடு, அல்லும் பகலும் அந்த நாம த்தை அறிக்கையிட வேண்டும். இயே சுவே எங்களுக்கு எல்லாவற்றிலும் எல்லாமாக இருக்கின்றார். “இயேசு” என்ற நாமத்தின் வழியாகவே ஒருவன் பிதாவிடத்தில் சேர முடியும். “இயேசு” என்ற நாமத்தின் வழியாகவே தேவ ஆவியானவரை (பரிசுத்த ஆவியானவர்) ஒருவன் பெற்றுக் கொள்ளமுடியும். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனு~ர்களுக்குள்ளே அவரு டைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. பரலோகத்திற்கு செல்ல வழியாக இருக்கின்ற ஒரே நாமம், பேய்கள் நடுநடுங்கின்ற ஒரே நாமம், மரணத்தையும், பாதாளத்தை ஜெயித்த ஒரே நாமம், இளை ப்பாறுதல் தரும் ஒரே நாமம், அது இயேசுவின் நாமம்! எனவே இரவு பகல் எவ்வேளையும், படுக்கைக்கு செல்லும் போதும், நடுஜாமத்தி லும், நித்திரையைவிட்டு எழும்பும்;போதும்;  “இயேசு” என்ற நாமத்தை விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும், வீட்டில், வெளியில், கல்வி நிலையங்களில், வேலைத் தளங்களில், வைத்திய சாலைகளில், பராமரிப்பு நிலையங்களில், சிறைச் சாலை யில் அல்லது வேறு எந்த இடத்திலிருந்தாலும்,  “இயேசு” என்ற நாம த்தை மனதார கூறுங்கள். அவர் நிச்சயமாக ஆறுதல் தருவார்!

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவேபாவத்திலே அழிந்து போகாமல், முடிவில்லாத வாழ்வை அடையும்படியாய் நீர் எங்களுக்குத் தந்த உம்முடைய குமாரனாகிய இயேசுவுக்கு நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6