புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2018)

மேய்ப்பனில்லாத ஆடுகள் போல...

மத்தேயு 9:38

ஆதலால், அறுப்புக்கு  எஜமான்  தமது அறுப்புக்கு  வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.


இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசே~த்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோன வர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனது ருகினார். அந்த ஜனங்களை நடத்தும் படியாய் ஏற்படுத்திய மதத்தலைவர் கள் தங்களுக்கென்று ஒரு மார்க்கத்தை உருவாக்கி, அதன் பிரகாரமாய்தான் தேவனை கண்டடையலாம் என்று ஜனங் களை வருத்தினார்கள். ஜனங்களுடைய நெருக்கத்திலே, ஜனங்களுடைய அறி யாமையிலே அவர்களுக்கு நல்ல வழியை காட்டுவதற்கு பதிலாக, அவர்களை குற்றம்பிடிப்பதிலேயே நோக்குள்ளவர்களாக இருந்தார் கள். அதனால் அவர்கள் மனம் தொய்ந்து போனவர்களும் சிதறடிக்க ப்பட்டவர்களுமாய் அலைந்து திரிந்தார்கள். இன்றும் கர்த்தரை அறியா தவர்களும், அவரை அறிய வேண்டிய பிரகாரமாக அறியாதவர்களும் அநேகராயிருக்கின்றார்கள். பலர் தங்களுக்கென்று பல மார்க்கங்களை ஏற்படுத்தி, அங்கே மெய்யான தேவனை கண்டு கொள்ளலாம் என எண்ணுகின்றார்கள். இதனால் பல மதத்தவர்களின் ஆத்துமா மேய்ப்ப னாகிய இயேசுவை அறியாமல் தொய்ந்துபோய் விடுகின்றது. இயேசு வோடு சேர்க்காதபடியால் சிதறடி க்கப்பட்டு போய்க்கிடக்கின்றார்கள். இந்த ஜனங்கள் மெய்யான தேவனை அறியும்படி, தேவனை நோக்கி ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். உங்களால் கூடுமானவரை பிரயாசப்படுங்கள். 

ஜெபம்:

அன்பான தேவனே, ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படியாய், மீட்பின் வழியாகிய இயேசுவை யாவரும் அறியும்படியாய் வேண்டிக் கொள்கின்றேன். நற்செய்திப் பணிக்காக பிரயாசப்படும் ஊழியர்களை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:11